ஆனந்த விகடன்-க்கு மருத்துவர்.அய்யா அளித்த வெள்ளந்தி நேர்காணல்......
விகடன் : பாமக தலைமையை ஏற்றுகொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி என்கீறீர்கள். உங்கள் தலைமையை ஏற்றுகொள்ள எந்த கட்சி முன் வந்துள்ளது...?
மருத்துவர்.அய்யா : சில கட்சிகளிடம் இருந்து சமிங்கைகள் வந்துருகின்றன , ஆனால் அவை எந்த காட்சிகள் என்று தற்போது சொல்ல இயலாது ,
தமிழகத்தில் மிக பெரிய அரசியல் வெற்றிடம் உள்ளது . 50 ஆண்டு கால கழகங்களின் ஆட்சில் தமிழகம் சீரழிந்துவிட்டது என்ற சிந்தனை அனைத்து மட்டங்களிலும் பரவி , அரசியல் ரீதியாக மாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள், அந்த மாற்று, நாங்கள்தான் அறிவித்து இருக்கிறோம் , இந்த ஆண்டு இறுதியில் ஊழலை எதிர்ப்பவர்கள் எங்கள் தலைமையில் வருவார்கள் ...
தமிழகத்தில் மிக பெரிய அரசியல் வெற்றிடம் உள்ளது . 50 ஆண்டு கால கழகங்களின் ஆட்சில் தமிழகம் சீரழிந்துவிட்டது என்ற சிந்தனை அனைத்து மட்டங்களிலும் பரவி , அரசியல் ரீதியாக மாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள், அந்த மாற்று, நாங்கள்தான் அறிவித்து இருக்கிறோம் , இந்த ஆண்டு இறுதியில் ஊழலை எதிர்ப்பவர்கள் எங்கள் தலைமையில் வருவார்கள் ...
தேமுதிக, திமுக இரண்டுமே மக்களால் புறக்கண்ணிக்கப்பட்ட கட்சிகள்..!!!
விகடன் : திமுக-வும், தேமுதிக-வும் சட்டமன்ற தேர்தல் அரங்கில் நெருங்கி வருவதுபோல தெரிகிறது, அப்படி ஒரு கூட்டணிஅமைந்தால், வட மாவட்டங்களில் பாமக அதை எப்படி எதிர்கொள்ளும் ..?
மருத்துவர்.அய்யா : தேமுதிக, திமுக இரண்டுமே மக்களால் புரகண்ணிக்கப்பட்ட கட்சிகள், பாரம்பாரிய மிக்க திமுக-வால்ஒரு நாடாளமன்ற தொகுதியை கூட வெல்ல முடிய வில்லை , அனால் நாங்கள் எங்கள் சொந்த பலத்தில் வென்று இருக்கிறோம் .
நாங்கள்தான் இங்கே மக்களுக்கு மாற்று, நாங்களே வெல்வோம்...!!!!!
நாங்கள்தான் இங்கே மக்களுக்கு மாற்று, நாங்களே வெல்வோம்...!!!!!
கண்ணியமான வளர்ச்சி அரசியலை முன்வைக்கிறோம்
விகடன் : பாமக அனைத்து தரப்பினரோடும் மோதல் போக்கை கடைபிடிப்பதால், அரசியல் அரங்கில் நீங்கள் தனித்துவிடப்படும் அறிகுறி தென்படுகிறதே...?
மருத்துவர்.அய்யா : "நாங்கள் தனித்துவத்வோடு அரசியல் செய்கிறோம், கண்ணியமான வளர்ச்சி அரசியலை முன்வைக்கிறோம், நாங்கள் தனித்துவிட படுகிறோம் என்றே பேச்சுக்கே இடம் இல்லை , எங்களை தனிமைப்படுத்த நினைப்பவர்கள் எங்களை போல தனித்து போட்டியிடட்டும். அப்போது தெரியும்
யார்..? மக்களோடு இருக்கிறார்கள் என்று .."
யார்..? மக்களோடு இருக்கிறார்கள் என்று .."
"அதிமுக, திமுக இரண்டுமே பொது எதிரிகள்தான் "
விகடன் : "கூட்டணி அரசியலையே விரும்புகிறது திமுக உங்களின் பொது எதிரியான ஜெயலலிதாவை விழ்த்த, நீங்கள் ஏன் திமுக-வோடு கூட்டணி சேரக்கூடாது..?"
மருத்துவர்:அய்யா : "அதிமுக, திமுக இரண்டுமே பொது எதிரிகள்தான் ,கடந்த பல ஆண்டுகளாக இதை நான் சொல்லி வருகிறேன். அதிமுக, திமுக இரு கட்சிகளையும் அப்புறபடுத்த வேண்டும் என்றுதான் அன்புமணி இராமதாஸ்யை முதல்வர் வேட்பாளராக அறிவித்து இருக்கிறோம், எங்கள் நிலைப்பாடு அப்படி இருக்க, நாங்கள் எப்படி அவர்களுடன் கூட்டணி சேர முடியும் ..?"
"ஜெயலலிதாவே வென்றதாக அறிவித்துவிட்டு போகலாம்"
விகடன் : "ஜெயலலிதா போட்டியிட இருக்கும் இடைதேர்தலில், பாமக ஏன் ஒரு வேட்பாளரை நிறுத்த கூடாது ..?
மருத்துவர்.அய்யா: "இடைதேர்தல் வேண்டாம் என்பதே தான் என் நிலைபாடு", ஏனென்றால், ஏற்கெனவே இரு பார்முலாக்கள் உள்ளன , திமுகவுக்கு திருமங்கலம், அதிமுகவுக்கு திருவரங்கம்.5000 தொடங்கி 6000 வரை இந்த தேர்தலில் ஓட்டுக்கு விலை நிர்ணயித்தனர், ஜெயலலிதா போட்டியிடும் தொகுதில் 7000 முதல் 8000 ருபாய் வரை வாக்குகளுக்கு கூடுதலாக விலை நிர்ணயிப்பார்கள், ஆகவே எந்த கட்சிகளும் இடைதேர்தலில் போட்டியிட வேண்டியது இல்லை, ஜெயலலிதாவே வென்றதாக அறிவித்துவிட்டு போகலாம்....
"அரசியல் பருவநிலைக்கு ஏற்ப பாஜக தன் நிலையை மாற்றிகொள்கிறது"
விகடன் : " சொத்துகுவிப்பு வழக்கில் விடுதலையான ஜெயலலிதாக்கு , மோடி வாழ்த்து சொல்கிறார்; தமிழக பாஜகவினர் பதவியேற்ப்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள், வரவிற்கும் சட்டமன்ற தேர்தலில், ஜெயலலிதாக்கு எதிராக வேட்ப்பாளரை நிறுத்த போவதாக தமிழக பாஜக சொல்கிறது ..!!! இது நாகரிக அரசியலா..? நாடகமா ?"
மருத்துவர்.அய்யா : "இதை எப்படி ஆரோக்கியமான அரசியல் என்று சொல்ல முடியும் ...? அரசியல் பருவநிலைக்கு ஏற்ப பாஜக தன் நிலையை மாற்றிகொள்கிறது, இவ்வளவு பெரிய வழக்கில் ஜெயலலிதா விடுதலையானது ஒரு பக்கம் இருக்கட்டும்,
கடந்த நான்கு ஆண்டு அதிமுக அரசியின் ஊழல்கள் சொல்லி மாளாது, நாங்கள் ஆளுநரிடம் 216 பக்க அறிக்கை கொடுத்தோம், பொதுப்பணிதுறை அதிகாரிகளின் ஊழல் பட்டியலை சிலர் வெளியிடுகிறார்கள், எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என ஊழலில் ஊறி திளைக்கும் அதிமுக அரசை, பாஜக பாராட்டுவது அரசியல் நாகரிகம் அல்ல.அதுபோல நீதிபதி.குன்ஹாவின் தீர்ப்பில் குற்றவாளியாகி, சிறைக்கு சென்ற ஜெயலலிதா , ஜாமீனில் வெளியே வந்த ஜெயலலிதாவை, மத்திய அமைச்சர். அருண் ஜெட்லி சந்திக்கிறார், இந்த சந்திப்புக்கு பிறகுதான் வருமான வரி வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கபடுகிறார், இப்போது பல்வேறு தரப்பு விமர்சனத்துக்கு இடையே கடும் நெருக்கடிக்கு பிறகு ஜெயலலிதா விடுவிக்கபடுகிறார் ஜெயலலிதா, பாஜகவினர் அவசர அவசரமாக வாழ்த்துக்கிறார்கள், இவை எல்லாம் அரசியல் அரங்கில் மிக பெரிய கேள்விகளை உருவாக்கியிக்கின்றன.....
கடந்த நான்கு ஆண்டு அதிமுக அரசியின் ஊழல்கள் சொல்லி மாளாது, நாங்கள் ஆளுநரிடம் 216 பக்க அறிக்கை கொடுத்தோம், பொதுப்பணிதுறை அதிகாரிகளின் ஊழல் பட்டியலை சிலர் வெளியிடுகிறார்கள், எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என ஊழலில் ஊறி திளைக்கும் அதிமுக அரசை, பாஜக பாராட்டுவது அரசியல் நாகரிகம் அல்ல.அதுபோல நீதிபதி.குன்ஹாவின் தீர்ப்பில் குற்றவாளியாகி, சிறைக்கு சென்ற ஜெயலலிதா , ஜாமீனில் வெளியே வந்த ஜெயலலிதாவை, மத்திய அமைச்சர். அருண் ஜெட்லி சந்திக்கிறார், இந்த சந்திப்புக்கு பிறகுதான் வருமான வரி வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கபடுகிறார், இப்போது பல்வேறு தரப்பு விமர்சனத்துக்கு இடையே கடும் நெருக்கடிக்கு பிறகு ஜெயலலிதா விடுவிக்கபடுகிறார் ஜெயலலிதா, பாஜகவினர் அவசர அவசரமாக வாழ்த்துக்கிறார்கள், இவை எல்லாம் அரசியல் அரங்கில் மிக பெரிய கேள்விகளை உருவாக்கியிக்கின்றன.....
"மக்களிடம் ஜெயலலிதாக்கு மக்களிடம் ஆதரவு இல்லை"
விகடன் : "ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், ஜெயலலிதாவுக்கு மக்கள் ஆதரவாக இருப்பதாக பொதுவான கருத்து நிலவுகிறதே."..?
மருத்துவர்.அய்யா: "மக்களிடம் ஜெயலலிதாக்கு மக்களிடம் ஆதரவு இல்லை, சில ஊடகங்களும், அதிகாரிகளும்,உளவுதுறையும் இணைந்து உருவாக்கும் பொய்யான தோற்றம். அது முதன்முதலாக முதல்வராகி, வளர்ப்பு மகன் திருமணத்தை ஜெயலலிதாவும், சசிகலாவும் நடத்திய ஊழல் ஆட்சிக்காக ஜெயலலிதாவை மக்கள் தண்டித்தார்கள், அதுபோல இன்னும் இரண்டே மாதங்களில் எல்லாம் தலைகிழாக மாறும். இப்போது நடந்துகொண்டிருக்கும் ஊழல்க்காகவும், செய்த தவறுக்காகவும் மக்கள் தண்டிப்பார்கள்...
"கலைஞர் அவர்களுக்கு என் நன்றிகளும் வாழ்த்துகளும்"
விகடன்: "நீதிபதி.குமாரசாமியின் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையிடு செய்ய, ஏன் இவ்வளவு தயக்கம் ..? தாமதம்..?
மருத்துவர்.அய்யா : " இது தொடர்பாக நாங்கள் கர்நாடக அரசுக்கும், வழக்குரைஞர்.ஆச்சாராவுக்கு, கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார்க்கும் கடிதம் எழுதினோம், சட்டரீதியான இந்த உரிமைபோராட்டம் ஒய்ந்துவிட கூடாது என்ற கவலையில் இருந்தபோது, கலைஞர் மேல்முறையீடு செய்யபோவதாக அறிவித்து இருக்கிறார், அவரது அறிவுப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது, அவருக்கு என் நன்றிகளும் வாழ்த்துகளும் ....
" ரஜினிகாந்த்க்கு அச்சுறத்தல்"
விகடன் : "ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த், இளையராஜா போன்றோர் கலந்துகொண்டது பற்றி உங்கள் கருத்து "..?
மருத்துவர்.அய்யா : "கடந்த திமுக ஆட்சியில் ஒரு விழா நடந்தபோது அதில் கலந்துகொண்ட அஜித் "இந்த மாதிரி விழாக்களுக்கு வர வேண்டும் என நிபந்தனை செய்ய கூடாது " என அந்த விழா மேடையிலே பகிரங்கமாக குற்றம் சுமத்தினார், கலைஞரை மேடையில் வைத்துகொண்டே அஜித் இதை சொன்னார், கலைஞர் அருகே இருந்த ரஜினிகாந்த எழுந்து நின்று கைதட்டி அஜீத்யின் பேச்சுக்கு வரவேற்ப்பு செய்தார், அதே ரஜினி இன்று ஜெயலலிதா பதவியேற்ப்பு விழாக்கு செல்கிறார் என்றால் அவர்க்கு என்ன அச்சுறுத்தல் இருந்து இருக்குமோ, தங்களுக்கு வேண்டாதவர்களை பழிவாங்கும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் எல்லோரையும் அனுசரித்து போக வேண்டிய சூழ்நிலை திரைத்துறையினருக்கு இருக்கிறது , இதை விட பெரிய காரணம் என்ன இருக்க முடியும் ..?
"பொறுப்பான எதிர்கட்சியாக செயல்படுவது நாங்கள் மட்டும்தான்"
விகடன் : " ஒரு எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த்யின் செயல்பாடு எப்படி உள்ளன"..?
மருத்துவர்,அய்யா : தமிழகத்தில் எதிர்கட்சி ஒன்று இருப்பதாக மக்களும் கருதவில்லை, நாங்களும் கருதவில்லை, அவரது நடவடிக்கையை மக்கள் பார்த்துகொண்டு இருகிறார்கள். இதில் நான் என்ன இருக்கு சொல்வதற்கு ..? பொறுப்பான எதிர்கட்சியாக செயல்படுவது நாங்கள் மட்டும்தான், ஆளும்கட்சி செய்யும் தவறுகளை சுட்டிகாட்டுவது மட்டும் அல்லமால், அதற்க்கான பரிகாரங்களையும் சொல்கிறோம் ...
"தேமுதிகவை ஒரு கட்சியாகவோ, அதன் தலைவர் விஜயகாந்த்யை ஒரு தலைவர்கவோ கூட நாங்கள் கருதவில்லை"
விகடன் : "சமிபத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்களோடும் பிரதமரை சந்திக்க சென்றபோது உங்களுக்கு பல முறை அழைப்பு விடுத்தும் , நீங்கள் அந்த அழைப்பை நிராகரித்து, அந்த பயணத்தையே புறகணித்தீர் ஏன் ..?
மருத்துவர்.அய்யா : "தேமுதிகவை ஒரு கட்சியாகவோ, அதன் தலைவர் விஜயகாந்த்யை ஒரு தலைவர்கவோ கூட நாங்கள் கருதவில்லை, அந்த கட்சிக்னே என்ன செயல் திட்டம் உள்ளது .?என்ன கொள்கை உள்ளது ..?
பாஜக வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தபோது நாங்கள் வைத்து முதல் நிபந்தனை தேமுதிக கூட்டணியில் வர கூடாது என்பதுதான் அனால் அவர்கள் அதை கேக்க வில்லை, இதனால் தான் அந்த கூட்டணியில் வேண்டவெறுப்பாகதான் அந்த கூட்டணியில் இருந்தோம், இது போன்ற நிலையில் விஜயகாந்த் தலைமையில் சென்று எங்கள் தரத்தை நாங்களே குறைத்து கொள்ள விரும்பாததால், நாங்கள் ஒதுங்கி கொண்டோம் .. அதில் என்ன தவறு இருக்"ஸ்டாலின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் நழுவுகிறார்"
பாஜக வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தபோது நாங்கள் வைத்து முதல் நிபந்தனை தேமுதிக கூட்டணியில் வர கூடாது என்பதுதான் அனால் அவர்கள் அதை கேக்க வில்லை, இதனால் தான் அந்த கூட்டணியில் வேண்டவெறுப்பாகதான் அந்த கூட்டணியில் இருந்தோம், இது போன்ற நிலையில் விஜயகாந்த் தலைமையில் சென்று எங்கள் தரத்தை நாங்களே குறைத்து கொள்ள விரும்பாததால், நாங்கள் ஒதுங்கி கொண்டோம் .. அதில் என்ன தவறு இருக்"ஸ்டாலின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் நழுவுகிறார்"
விகடன் : " முக.ஸ்டாலின்- அன்புமணிக்கும் இடையில் நடந்த அறிக்கை போரை கவனித்தீர்களா..?"
மருத்துவர்.அய்யா : "ஆமாம். அது அனைத்தையும் படித்தேன் அன்புமணி எழுப்பிய 20 கேள்விகளுக்கு ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லவில்லை, வேறு எதை எதையோ பேசுகிறார் தவிர, அந்த கேள்விகளுக்கு பதில் சொல்லமால் ஸ்டாலின் நழுவுகிறார்கிறது.?
"கலைஞர் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பாரா ..?"
விகடன் : "திமுக-தரப்பில் தாமரைசெல்வன் கேட்ட கேள்விக்கு கூட அன்புமணி பதில் சொல்லவில்லையே ..?
மருத்துவர்.அய்யா : "தாமரைசெல்வனை திமுகவில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கட்டும் , எங்களின் முதல்வர் வேட்பாளரான அன்புமணி இராமதாசு பதில் சொல்வார். தாமரைசெல்வனை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது இருக்கட்டும். கலைஞர் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பாரா ..? அதற்க்கு கலைஞரே ஒப்புகொள்ள மாட்டார், அவரே இன்னும் முதல்வர் கனவில் தான் உள்ளார். ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக இல்லைதா போதிலும், முன்னால் துணை முதல்வர் தளபதி என்ற அடிப்படையில் அவரோடு வாதிக்க விரும்புகிறோம் , அனால் தாமரைசெல்வன் என்ற அம்பை எங்கள் மீது எய்கிறார்கள் திமுகவினர்..
"திருமாவுக்கு அறிவுரை அல்ல, ஆலோசனை"
விகடன் : "பாமக இடம்பெறும் அணியில் விசிக இடம்பெறாது என்கிறார் திருமா . வட மாவட்டங்களில் இரு சமூகங்களின் நலன் கருதி மூத்த தலைவரான நீங்கள், திருமாவுடன் சுமுக உறவுக்கு வித்திடலாமே..?
மருத்துவர்.அய்யா : "தென் மாவட்டங்களில் சாதி கலவரம் ஏற்பட்டபோது நான் தலையிட்டு, இரு தரப்புக்கும் சமதானம் செய்து வைத்தேன். தலித்து மக்களுக்கு நான் செய்த பணிகளை பாராட்டி அவரே எனக்கு அம்பேத்கர் விருது கொடுத்தார்தான், ஆனாலும் தர்மபுரி சம்பவத்தின் போது அதில் கடுகளவுக்கு கூட எனக்கோ எங்கள் கட்சிக்கோ தொடர்பு இல்லை என, அப்போது லண்டனில் இருந்த திருமாவிடமே அலைபேசியில் கூறினேன். ஆனாலும் அன்னை அவத்தூறு பேசி சூழ்நிலையை கெடுத்தார்கள், இவர்கள் செய்த கட்டபஞ்சத்தால்தான் அந்த தற்கொலை நடந்தது.
அதை கொலை என மாற்றினார்கள் அனால், மரக்கானத்தில் எங்கள் இளைஞர்களை இருவரை கொலை செய்து, அதை தற்கொலை என்று சொன்னார்கள். என்ன செய்வது.? அரசும், அதிகாரமும் அவர்களின் பக்கம் இருந்ததால் நானும், என் கட்சியினரும் சிறை சென்றோம்.
அதை கொலை என மாற்றினார்கள் அனால், மரக்கானத்தில் எங்கள் இளைஞர்களை இருவரை கொலை செய்து, அதை தற்கொலை என்று சொன்னார்கள். என்ன செய்வது.? அரசும், அதிகாரமும் அவர்களின் பக்கம் இருந்ததால் நானும், என் கட்சியினரும் சிறை சென்றோம்.
இனி சமூக நல்லிணத்துக்குக்கா, இவர்களோடு எப்போதும் இணைய முடியாது, அரசியலில் திருமா செய வேண்டியது ஒன்றே ஒன்று மட்டுமே, இதை அவர் அறிவுரையாக அல்லாமல், ஆலோசனையாக மட்டும் எடுத்து கொள்ளலாம், அவர் எந்த பிரிவு தலித்து தலைவராக தன்னை முன்னிருத்து கொள்கிறாரோ, அந்த மக்களின் வாக்கு வங்கியை நம்பி அவர் எங்களை போல தனித்து நின்று தேர்தலை சந்திக்கட்டும் , இதை அவர் செய்வார் என நான் நம்புகிறேன் ....
@@முற்றுபெற்றது





No comments:
Post a Comment