மருத்துவர்.அன்புமணி அறிக்கை
மாணவர்களுக்கு நிபந்தனையின்றி கல்வி கடன் வழங்க வேண்டும்
மாணவர்களுக்கு நிபந்தனையின்றி கல்வி கடன் வழங்க வேண்டும்
"மாணவர்களுக்கு நிபந்தனையின்றி
கல்விக் கடன் வழங்க வேண்டும்!"
கல்விக் கடன் வழங்க வேண்டும்!"
தமிழ்நாட்டில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விட்ட நிலையில், கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைகள் நடைபெற்று வருகின்றன.
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையும் அடுத்த சில வாரங்களில் தொடங்கிவிடும். பணம் படைத்த மாணவர்களின் கல்லூரிக் கல்வி உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பொருளாதாரக் காரணங்களால் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன.
பட்டப் படிப்புக்கு பணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதால் தான் கல்விக் கடன் வழங்கும் திட்டம் கடந்த 2000&01 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், ஏழை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புக்கள் தொட்டுவிடும் தொலைவில் இருந்தாலும், அதற்குத் தேவையான கல்விக் கடன் மட்டும் தொடுவானமாகவே தெரிகிறது. எத்தனை வங்கிகளை அணுகி, எத்தனை விண்ணப்பங்கள் கொடுத்தாலும் கல்விக் கடன் மட்டும் கைகூட மறுக்கிறது. இதற்கு காரணம் கல்விக் கடன் வழங்க பொதுத்துறை வங்கி நிர்வாகங்கள் விதிக்கும் நடைமுறைக்கு சாத்தியமில்லாத விதிமுறைகள் தான்.
2015&16 ஆம் ஆண்டில் கல்விக் கடன் வழங்க இன்னும் கடுமையான விதிமுறைகளை இந்திய வங்கியாளர் சங்கம் வகுத்திருக்கிறது. கல்விக்கடன் வழங்குவது குறித்து விவாதிக்க அண்மையில் புதுதில்லியில் நடைபெற்ற பல்துறை அதிகாரிகள் கூட்டத்தில், ‘ஏ’ தரச்சான்று பெற்ற 1100 கல்லூரிகளின் பட்டியலை நிதித்துறை அதிகாரிகளிடம் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தினர் வழங்கினர். அக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு இருக்கும் என்பதால் அவர்களுக்கு மட்டும் கல்விக்கடன் வழங்கினால் போதுமானது என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதேபோல், தமிழ்நாட்டில் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க வேண்டாம் வங்கி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
‘ஏ’ தரச்சான்று பெற்ற கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு உடனடியாக வேலை கிடைத்து விடும் என்பது தான் அவர்களுக்கு வாங்கிகள் போட்டிப்போட்டுக் கொண்டு கடன் தருவதற்குக் காரணமாகும். அதேபோல், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் அனைவரும் வசதி படைத்தவர்களாக இருப்பர் என்ற எண்ணத்தில் தான் அவர்களுக்கு கல்விக்கடன் தரப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இவை தவறான அனுமானங்களின் அடிப்படையிலான தவறான அணுகுமுறை ஆகும். பந்தயத்தில் ஜெயிக்கும் குதிரைகள் மீது பணம் கட்ட இது சூதாட்டமல்ல... ஏழை மாணவர்களின் வாழ்க்கை என்பதை வங்கி அதிகாரிகள் உணர வேண்டும். ஓரளவே மதிப்பெண் எடுத்த ஏழை மாணவர்கள் வேலை கிடைக்க சிறிதளவாவது வாய்ப்புள்ள படிப்பில் சேர வேண்டுமானால் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் தான் ஒரே வழியாகும்.
‘ஏ’ தரச்சான்று பெற்ற கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு உடனடியாக வேலை கிடைத்து விடும் என்பது தான் அவர்களுக்கு வாங்கிகள் போட்டிப்போட்டுக் கொண்டு கடன் தருவதற்குக் காரணமாகும். அதேபோல், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் அனைவரும் வசதி படைத்தவர்களாக இருப்பர் என்ற எண்ணத்தில் தான் அவர்களுக்கு கல்விக்கடன் தரப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இவை தவறான அனுமானங்களின் அடிப்படையிலான தவறான அணுகுமுறை ஆகும். பந்தயத்தில் ஜெயிக்கும் குதிரைகள் மீது பணம் கட்ட இது சூதாட்டமல்ல... ஏழை மாணவர்களின் வாழ்க்கை என்பதை வங்கி அதிகாரிகள் உணர வேண்டும். ஓரளவே மதிப்பெண் எடுத்த ஏழை மாணவர்கள் வேலை கிடைக்க சிறிதளவாவது வாய்ப்புள்ள படிப்பில் சேர வேண்டுமானால் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் தான் ஒரே வழியாகும்.
தனியார் கல்லூரிகளில் அதிக பணம் கட்டி படிக்க வருகிறார்கள் என்பதற்காக இவர்களை பணக்கார மாணவர்கள் என்று கருதக் கூடாது. இவர்களில் பலர் குடியிருக்கும் வீட்டையும், வாழ்வாதாரம் அளிக்கும் நிலங்களையும் விற்று நன்கொடை செலுத்தியவர்கள் என்பதையும், அதற்குப்பிறகு கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் தான் கல்விக்கடன் கேட்டு வங்கிகளை அணுகுகிறார்கள் என்பதையும் அதிகாரிகள் உணர வேண்டும்.
இந்தியாவில் இதுவரை ரூ.61,176 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டிருப்பதாகவும், இதில் 26.8%, அதாவது ரூ.16,380 கோடி கடனுடன் தமிழகம் தான் முதலிடத்தில் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்தக் கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை 9,56,100 ஆகும். மேலோட்டமாக பார்க்கும்போது இது வியப்பாக இருந்தாலும், இந்த கடனின் அளவு மிகவும் குறைவானதாகும். தமிழகத்தில் 517 பொறியியல் கல்லூரிகளும், 1150 கலை, அறிவியல் கல்லூரிகளும் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சம் பேர் பல்வேறு பட்டப்படிப்புகளில் சேர்கின்றனர். கல்விக் கடன் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து இன்று வரை சுமார் 1.20 கோடி பேர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அவர்களில் 9.56 லட்சம் பேருக்கு, அதாவது 7.96 விழுக்காட்டினருக்கு மட்டுமே பொதுத்துறை வங்கிகள் கல்விக் கடன் வழங்கியுள்ளன. இது பற்றாக்குறையிலும் பற்றாக்குறையாகும்.
மாணவர்களுக்கு நிபந்தனையின்றி கல்விக் கடன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பல முறை ஆணையிட்டுள்ள போதிலும், அதை வங்கி நிர்வாகங்கள் மதிக்காதது கண்டிக்கத்தக்கது.
மாணவச் செல்வங்கள் தான் இந்தியாவின் சொத்துக்கள் ஆவர். இவர்களின் கல்விக்காக வழங்கப் படும் கடன் இந்தியாவின் வளர்ச்சிக்கு செய்யப்படும் முதலீடாகும். இதில் தேவையற்ற நிபந்தனைகளை விதிக்கக்கூடாது. 2014 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் வரை பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் ரூ.2,60,531 கோடி ஆகும். இதில் பெரும்பாலானவை பெரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டவை. இதற்குப் பிறகும் பெரு நிறுவனங்களுக்கு தடைபின்றி கடன் வழங்கப்படும் நிலையில் மாணவர்களுக்கு சில லட்சங்களை கடனாக வழங்க வங்கிகள் தயங்குவது நீதியல்ல. எனவே, நடப்பாண்டில், கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வங்கிகள் கடன் வழங்க வேண்டும்.

No comments:
Post a Comment